Tuesday 27 March 2012

இலவசங்கள் அவசியம்தானா? மலிவு விலையில் தடையில்லா மின்சாரம் வேண்டும்!

மதுரையில்
சென்ற சனிக்கிழமை (24.03.2012) காலை 6 - 9 மணியிலிருந்து கீழ்கண்டவாறு 
மதியம் 12 - 3 மணி 
            4 - 4.30 மணி
            4.45 - 5 மணி
            6 - 6.45 மணி
       7.30 - 8.15 மணி
     9.45 - 10.30 மணி
இரவு 12 - 12.45 மணி
          1.30 - 2.15 மணி
ஞாயிற்றுக் கிழமை காலை 3.45 - 4.30 மணிவரை பல மணி நேரம் மின்வெட்டு இருந்தது. ஒவ்வொரு நாளும் இதே நிலைதான். இதை சரி செய்வார் யாருமில்லை. கேட்டாலும் எதிர்முனையில் பதில் கிடைக்காது. என்ன செய்ய! சுதந்திர நாட்டில் பழகித் தொலைய வேண்டியதுதான்.

இந்த லட்சணத்தில் இந்த ஆண்டு பட்ஜெட்டில் இலவச திட்டங்கள் மற்றும் மானியத்திற்கு 22 ஆயிரம் கோடிக்கு மேல் ஒதுக்கப்பட்டுள்ளது அவசியம்தானா? தமிழ் நாடெங்கும் மலிவு விலையில் தடையில்லா மின்சாரம் வேண்டும்!

No comments:

Post a Comment