Friday 4 May 2012

பயணிகளின் நரகம்

டோக்கியோ நகர ரயில் பயணம் அவ்வளவு எளிதல்ல. உற்சாகம் ஊட்டுவதுமல்ல. ஜப்பான் ரயில்களில் தினமும் 8.7 மில்லியன் பயணிகள் பயணிக்கிறார்கள். ரயில் பெட்டிகளின் கொள்ளளவுக்கு மேல் இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்க வேண்டியிருப்பதால், ரயில் பெட்டிகளில் உள்ள இடங்களில் அனைத்துப் பயணிகளையும் அடைக்க என்றே 'ஓஷியா' என்றழைக்கப்படும் வெள்ளைக் கையுறை அணிந்த பணியாட்கள் இருக்கிறார்கள்.

ரயில் பெட்டிக்குள் அழுத்தித் தள்ளும் பணியாட்கள், ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும், ஒவ்வொரு பெட்டிக்கு முன்னும்  அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். பயணிகளை உள்ளே திணித்த பின்புதான் கதவுகள் சாத்திக் கொள்ளும், ரயிலும் கிளம்பிச் செல்லமுடியும். 

முதன்முதலில் ஷிஞ்சுகு என்ற ரயில் நிலையத்தில் மாணவர்கள் பகுதிநேர 'பயணிகள் உதவியாளர்கள்' என்று பணி புரிந்தார்கள். பின் ரயில் நிலைய பணியாளர்களும் இதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மோசமான நடத்தையுள்ள ஆண்களும், பெண்களும் திருடுவதும், பாலியல் தொல்லை தருவதும் உண்டு.


No comments:

Post a Comment